200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியை பெற்றுக்கொண்டது இலங்கை
உலக வங்கியின் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான பிரிவு, இலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. குறித்த நிதியானது தொற்றா நோய் தடுப்பு மற்றும் ஆரம்ப சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான உடன்படிக்கையில், இலங்கையின் சார்பில் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர். ஏச். சமரசிங்கவும் உலக வங்கியின் சார்பில் Idah Pswarayi-Riddihough வும் கைச்சாத்திட்டனர்.
0 comments :
Post a Comment