Monday, December 3, 2018

நாளையிலிருந்து கம்பி எண்ண உள்ளவர்கள் யார் தெரியுமா?

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கும் அவரது அமைச்சர்களுக்கும் எதிராக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அவரது சகாக்களும் தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்த நீதிமன்று பிரதம மந்திரியாகவும் அமைச்சர்களாகவும் செயற்படுவதற்கு இடைக்கால தடையுத்தரவு விதித்துள்ளது.

இத்தடையுத்தரவை அடுத்து பெரும்பாலான அமைச்சர்கள் இன்று பிற்பகலே தமது பெட்டிகளை அங்கிருந்து கட்டிக்கொண்டு வெளியேறியதாக அறிய முடிகின்றது. இருந்தபோதும் ஒரு சில அமைச்சர்கள் இன்று இரவுவரை அமைச்சுக்களில் தங்கியிருப்பதை அவதானித்த எதிராளிகள் அது தொடர்பான வீடியோக்களை பதிவு செய்துவருவதாகவும் தொடர்ந்தும் அவர்கள் அமைச்சகத்தினுள் சென்று செயற்பட்டால், அவர்களுக்கு எதிராக நீதிமன்ற உத்தரவை மீறியதாக வழக்குதாக்கல் செய்யலாம் என்றும் நம்பப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com