Monday, December 3, 2018

ஜனாதிபதி- ஐ.தே. முன்னணியிடையேயான பேச்சு தோல்வியில் முடிந்துள்ளது.

இன்று பிற்பகல் 8.00 மணியளவில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியினருக்கும் ஜனாதிபதிக்குமிடையேயான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. ஜனாதிபதியை சந்தித்த ஐ.தே.முன்னணியினர் ரணில் விக்கரமசிங்கவை பிரதமராக நியமிக்குமாறு கோரியபோது அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தை முடிவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்து லக்ஸ்மன் கிரியல்ல, நாம் எமது முன்னணியின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க அவர்களை நியமிக்குமாறு வேண்டினோம். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து விட்டார். பிரதமராக பெரும்பாண்மையானோர் யாரை விரும்புகின்றார்களே அவரையே ஜனாதிபதியால் நியமிக்க முடியும். ஜனாதிபதி விரும்புகின்றவரை அல்ல என்று தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடல் மிகக்குறுகியே நேரத்திலேயே நிறைவு பெற்றுள்ளமை அவதானிக்க முடிந்துள்ளது.

அதேநேரம் இன்றைய சந்திப்பு வெற்றியளிக்காவிட்டால் எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதியை சந்திக்கப்போவதில்லை என முன்னணி தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com