Monday, December 3, 2018

ஆழும் கட்சிக்கு ஆதரவளிப்பதென்றால் எதிர்கட்சி பதவியை துறவுங்கள். வாசு ஆவேசம்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைமை பொறுப்பை வகிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கம் அமைக்க ஆதரவளிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படியாயின் அவர்கள் எதிர்க்கட்சி பொறுப்புக்களில் இருந்து நீங்கிக்கொள்ளவேண்டும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில்லேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைமை வகிக்கும் சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரளிப்பதாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளது. உலகில் எந்த நாட்டிலும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி பொறுப்பை வகிக்கும் கட்சி அரசாங்கம் அமைக்க ஆதரவளிப்பதில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த காலங்களிலும் எதிர்க்கட்சியில் இருந்தாலும் ஆளுங்கட்சியின் தீர்மானங்களை ஆதரித்தே வந்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com