Tuesday, December 4, 2018

மைத்திரிபால உடனடியாக வர்த்தமானி அறிவித்தல்களை மீளப்பெறவேண்டும். அனுரகுமார

ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட பாராளுமன்றை கலைத்ததான , பிரதமரை நியமித்த , அமைச்சர்களை நியமித்த என்ற மூன்று வர்த்தமானி அறிவித்தல்களை உயர் நீதிமன்று இடை நிறுத்தி வைத்துள்ளது.

எனவே தற்போது ஜனாதிபதி செய்யவேண்டியது யாதெனில் உடனடியாக மேற்படி வர்த்தமான அறிவித்தல்களை வாபஸ் பெற்று பெரும்பாண்மை இருக்கின்ற ஒரு தரப்பிடம் அரசாங்கத்தை பாரமளிக்கவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ராஜபக்சவும் ரணில் விக்கிரமசிங்கவும் தோழ்களில் கையை போட்டுக்கொண்டு நண்பர்களாக இப் பிரச்சினையை முடித்துக்கொள்வதற்கு நாம் இடமளிக்கமாட்டோம். இப்பிரச்சினை அரசியல் யாப்பு ரீதியாக தீர்க்கப்படவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com