Tuesday, December 4, 2018

நாட்டின் நன்மையை கருத்திற் கொண்டு உயிரைக் காத்துக்கொள்ளுங்கள். ஜனாதிபதிக்கு டலஸ்

நேற்று உயர் நீதிமன்றினால் வழங்கப்பட்ட பிரதம மந்திரி மற்றும் அமைச்சரவைக்கான இடைக்கால தடையுத்தரவை அடுத்து நாட்டில் பிரதம மந்திரியோ அமைச்சரவையோ அற்ற நிலை காணப்படுகின்றது.

அரசியல் யாப்பின் பிரகாரம் ஜனாதிபதியின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமானால் நாட்டின் பொறுப்பை பிரதம மந்திரி ஏற்பார். ஆனால் இன்று நாட்டில் பிரத மந்திரி ஒருவர் இல்லை. இந்நிலையில், ஜனாதிபதியின் உயிருக்கு ஆபத்து ஒன்று ஏற்படுமானால் நாட்டின் நிலைமை என்னவாகும் என்ற கேள்வியை எழுப்பியுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பை கருத்திற்கொண்டு ஜனாதிபதி தனது பாதுகாப்பில் அதி உச்ச கவனம் செலுத்தவேண்டும் என வேண்டியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com