Sunday, December 30, 2018

மூன்று ஆளுநர்களுக்கு வரப்போகும் ஆப்பு...

மாகாண ஆளுநர்கள் மூவரின் பதவி பறிபோகும் நிலையில் உள்ளதாக, செய்திகள் கசிந்துள்ளன.

அத்துடன் ஏனைய மாகாண ஆளுநர்கள் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. எதிர்வரும் ஜனவரி மாதத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், மாகாண ஆளுநர்களுக்கும் இடையில் இடம்பெறவுள்ள சந்திப்பின் பின்னர், மேற்படி மாகாண ஆளுநர்களின் இடமாற்றம் குறித்து அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் மூன்று ஆளுநர்களின் பதவி பறிபோகும் அபாயம் உள்ளதாகவும், தெரிய வருகிறது. புதியவர்களை நியமிக்கும் நோக்கிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக, அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com