Sunday, December 30, 2018

சம்பந்தன் தம்பட்டம் அடிப்பதை கண்டு, குலுங்கிக் குலுங்கி சிரித்தேன்....

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன், கடந்த 2004 ஆம் ஆண்டு நாட்டை படு பாதாளத்திற்குள் தள்ளி விட்டு, இப்போது ஜனநாயகம் தம்மால் காப்பாற்றப்பட்டு விட்டதாக தம்பட்டம் அடித்து வருவதை எண்ணி, தான் குலுங்கிக் குலுங்கி சிரித்ததாக, தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் வீ. ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பேச்சைக் கேட்டு, தமிழ் தேசிய கூட்டமைப்பு 2004 ஆம் ஆண்டு தேர்தலை புறக்கணித்து விட்டனர். அன்று ஆரம்பிக்கப்பட்ட அவலம், தமிழ் மக்களிடையே இன்றுவரை நீடிக்கிறது.

அண்மையில் நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளின் போது,பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கூஜா தூக்கிய சம்பந்தன், இப்போது ஜனநாயகத்தை பற்றி பேசுவது மிகவும் நகைப்பாக இருப்பதாக ஆனந்த சங்கரி கூறியுள்ளார்.

அத்துடன் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனை, தான் ஒரு அரசியல்வாதியாகவே பார்க்கவில்லையென்று தெரிவித்த அவர், சுமந்திரன் காலை ஒரு கதையையும், மாலை ஒரு கதையையும் பேசிக்கொண்டிருக்கிறார்.

இவ்வாறானவர்களை நம்பி தமிழ் மக்கள் ஏமாறுவது, தற்போது சகஜமாகி விட்டதாக வீ. ஆனந்த சங்கரி கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com