Sunday, December 30, 2018

செவ்வாய் முதல் ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டை....

ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் பணிகள், நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக, ஆட்பதிவு திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த அடையாள அட்டை,கடந்த 17 ஆம் திகதி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் பரீட்சாத்தமாக விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்த பணிகள் வெற்றியளித்திருப்பதால், இந்த வேலைத்திட்டத்தை நாடு முழுவதும் முன்னெடுக்கவுள்ளதாக, ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து மக்களுக்கும், ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டைகள் விரைந்து வழங்கப்படும் என தெரிவித்த அவர், இதன்மூலம் மக்கள் பயனடைவார்கள் என்றும் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com