Saturday, December 29, 2018

முக்கிய மூன்று கட்சிகளின் சம்மதத்துடன், புதிய அரசியலமைப்பு வரைவு நிச்சயம்...

புதிய அரசியலமைப்பை கொண்டு வரும் முயற்சியில், தமிழ் அரசியல்வாதிகள் பலர் பெரும் பிரயத்தனங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

புதிய அரசியல் அமைப்பைக் கொண்டு வரும் முயற்சில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்கு அதிகமாகவே உள்ளது. இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்,யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்துரைத்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி, ஜேவிபி, தமிழ் தேசிய கூட்டமைப்பு முதலான கட்சிகள் இணங்கும் வகையிலான அரசியலமைப்பு வரைவொன்று,கொண்டுவரப்படும் என அவர் கூறினார்.

இந்த வரைவு, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதிக்கு முன்னர் வரும் என தாம் எதிர்பார்ப்பதாக, எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com