Saturday, December 29, 2018

இலங்கை துறைமுக அதிகார சபை, 16 கோடி ரூபாவிற்கு பதிலளிக்க வேண்டும்..

இலங்கை துறைமுக அதிகார சபை, 18 கனரக வாகன கொள்கலன்களை விடுவித்தமை சட்டவிரோதமானது என, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தின தேரர் கூறுகிறார்.

தடைசெய்யப்பட்ட கிளைபோசெட் களைநாசினியை உள்ளடக்கிய, 18 கனரக வாகனங்களை இலங்கை துறைமுக அதிகார சபை விடுத்துள்ளதாக, அவர் தெரிவித்தார்.

இந்த களைநாசினியின் பெறுமதி சுமார் 16 கோடி ரூபாய்கள் என்று கூறிய அவர், இது குறித்து துரித விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து தாம் எதிர்வரும் தினமொன்றில் ஜனாதிபதியிடம் முறையிடவுள்ளதாகவும், அத்துரலிய ரத்தின தேரர் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com