Saturday, December 29, 2018

கல்வித் பொது தராதர உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள், இன்று நள்ளிரவுக்குள் வெளியிடப்படும்...

கல்வித் பொதுத்தாரதார உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள், இன்று  நள்ளிரவுக்குள் வெளியிடப்படும் என, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார்.

முன்னர் வெளியிடப்பட்ட தகவல்களின் படி, கடந்த வாரமே பரீட்சை பெறுபேறுகள் வெளியாகுமென கூறப்பட்டிருந்தது. எனினும் இந்தப் பெறுபேறுகள் வெளியிடப்படாத நிலையில், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேற்படி தகவலை வெளியிட்டார்.

அத்துடன் சில ஊடகங்களில் நாளைய தினமே பெறுபேறுகள் வெளியிடப்படும் என்ற செய்தி வெளியிடப்பட்டுள்ளமை, உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சையில், 3 லட்சத்து 21 ஆயிரத்து 469 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com