Saturday, December 29, 2018

இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற குடும்பத் தகராறுகளில், இருவர் பலி...

நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற குடும்பத் தகராறுகளால், இருவர் பரிதாபமாகப் பலியாகினர்.

ரத்தினபுரி பிரதேசத்தில் உள்ள நபர் ஒருவர், தமது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார். நீண்ட காலமாக இவர்களுக்கிடையில் இருந்த கருத்து முரண்பாடுகள், கைகலப்பாக மாறியதை அடுத்து, இந்த கொலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பலியானவர் 40 வயதானவர் என்று, காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம், ஹிங்குராங்கொட பகுதியில் சகோதரர்கள் இருவர் இணைந்து தாக்கியதில், அவர்களின் தந்தை பலியானார். ஹிங்குராங்கொட பகுதியின் கடுவுல்ல - கொலனிய பகுதியைச் சேர்ந்த 66 வயதானவரே, சம்பவத்தில் பலியானார்.

இந்த கொலை இடம்பெற்றதற்கான, காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்று தெரிவித்த ஹிங்குராங்கொட காவல்துறையினர், சந்தேக நபர்களான சகோதரர்களைக் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com