Monday, December 17, 2018

ரெலோவினால் தமிழ் மக்கள் மீது மேற் கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு நியாயம் வேண்டும்.

ரெலோ இயக்த்தின் தற்போதைய மற்றும் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றார் சோதிலிங்கம். முன்னாள் ரெலோ உறுப்பினரான அவர் அவ்வியக்த்தின் முறைகேடுகள் தொடர்பில் கடந்த சிலவாரங்களாக வாரந்தம் ஒரு கடிதத்தை தனது அமைப்பின் தலைமையை நோக்கி எழுதுகின்றார்.

இவ்வாரம் சோதிலிங்கம் ரெலோவின் தலைமையை நோக்கி எழுதியுள்ள கடிதத்தில் தான் அங்கம் வகித்த இயக்கம் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட மனித உரிமை மீறல்களுக்கு நியாயம் வேண்டும் வழங்க என்று கோருகின்றார்.

(த சோதிலிங்கம் எழுதும் ஆயிரம் கடித தொடர்)


எழுச்சி, 17/12/2018,
(கடிதம் 10, மாதம்12, கிழமை 04)

தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு கடிதம்.

தமிழீழ விடுதலை இயக்கம்,
இலங்கை.

ரெலோவினால் தமிழ் மக்கள் மீது மேற் கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு நியாயம் வேண்டும்.

இது போன்ற கருத்துப் பகிர்வுகள் உங்களில் பலருக்கு தலையிடி கொடுப்பதாக நீங்கள் பாவனை காட்டி ஒருவர் மீது இவர் ஏன் எழுதுகிறார் என்ற கேள்வியோ (அவரது எழுத்துரிமையை மறுக்கும் செயல்) சிலவேளை கோபமோ ஏற்படுகிறது என்றால் நீங்கள் இன்னமும் மனிதர்களை மதிப்பது பற்றி தெரியவில்லை, தமிழ் மக்களுக்கா போராாடவில்லை என்பதேயாகும், அல்லது உங்களில் சிலரது தனிப்பட்ட சுய நலத் தேவைகளுக்காகவே விடுதலை இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றி செயற்ப்படுவதாகவே இருக்கும்.

அல்லது விடுதலைப்போராட்ட - அரசியல் கட்சிக்குரிய பெறுமதிகளையோ, அரசியலை மக்கள் நலன் பற்றி புரியாதவர்களாகவும் இருக்கலாம்.

விடுதலைப்போராட்ட இயக்கம் அல்லது அரசியல் கட்சி அல்லது பொது அமைப்பு ஒன்று தன்மீது விமர்சனங்களை வரவேற்க்க வேண்டும் தனது சரிபிழைகளை வெளியில் இருப்போர் அவதானித்து கூறுவதை அறிந்து தெரிய வேண்டும் திருத்திக் கொள்ள வேண்டும். இது பொது மக்களுக்காக சேவை செய்யும் அனைவரினதும் மிகவும் முக்கியமான அடிப்படை இதனை ஏற்றுக்கொள்ளாத கட்சி, இயக்கம் பொது அமைப்பு என்பது மக்களுக்கானது அல்ல அது சுயநலக்கும்பலின், கொலையாளிகளின் கூட்டமேயாகும்.

பொது அமைப்புக்கள் இயல்பாகவே தவறுகளை செய்யும் ஆனால் தவறுகள் பிழைகளால் வளர்க்கப்படுவதில்லை, தவறுகள் பிழைகளை திருத்தி, தாம் இயங்குப் மக்களின் அபிப்பிராயங்களை அறிந்து திருத்தியமைத்து இயங்குவதே முன்னேற்ற கரமானதும், அறமுமாகும்.

தமிழிழ விடுதலை இயக்கம் வரலாற்றில் பல தவறுகளை செய்துள்ளது தவறுகளில் உயிரிழப்பற்ற தவறுகளை பிரித்து மனிதர்களின் உயிர்வாழும் உரிமைகளை மறுத்த விடயங்களை இங்கே வெளிப்படுத்தி இவைகள் பற்றி கட்சி ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் இதன்மூலம் கட்சி தன்னைப் பலப்படுத்த வேண்டும்.

1) இந்தியாவில் இயக்கத்தின் உள்ளே நடைபெற்ற கொலைகள், யார் யாரையெல்லாம் கொலை செய்யப்பட்டுள்ள்ளார்கள், அதற்கான காரணங்கள் நியாயங்கள்.

2) இலங்கையில் இயக்கத்தினால் செய்யப்பட்ட உட்படுகொலைகள் கொலைகள், அதற்கான காரணங்கள் நியாயங்கள்.

இங்கே தோழர் நேருவை குறிப்பிடுகிறேன்.

3) இலங்கையில் மிதவாத அரசியலில் ஈடுபட்ட ஆலாலசுந்தரம், தர்மலிங்கம் போன்றோரது கொலைக்கான காரணங்கள், நியாயங்கள்.

4) வடமராட்சியிலிருந்து ரெலோவினை எதிர்த்து ஊர்வலமாக வந்த மக்கள் மீதான துப்பாக்கி பிரயோகமும் அதன் போது கொல்லப்பட்டவர்கள் விபரங்கள், காரணங்கள், நியாயங்கள்.

5) யாழ் வைத்திய சாலையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் விபரங்கள், நியாயங்கள்.

6) இந்திய இராணுவத்தின் காலங்களில் நடைபெற்ற பொது மக்கள் மீதான கொலைகள்.

7) இந்திய இராணுவத்தின் காலத்தில் தலைமைக்கு ஆதரவளிக்காத அல்லது கொள்ளை கொலைக்கு ஆதரவளிக்காதவர்கள் கொல்லப்பட்திற்கான காரணங்கள், விபரங்கள், நியாயங்கள்

இந்த சந்தர்ப்பத்தில் தோழர் கிருட்டி (மட்டக்களப்பு), மற்றும் செந்தோழர், இவர்களின் உறவினர்கள் தோழர் கிருட்டியி்ன் சகோதரிகள் இன்றும் ரெலோ இதற்காரன நியாயம் வழங்கவில்லை கேட்பாரற்று கிடக்கும் நியாயம் என ஐரோப்பாவரை குரல் எழுப்புகிறார்கள்.

8)புலிகளுடன் தொடர்ந்து மோதிக்கொண்டிருந்தவர்களை ரெலோவினுள் சிலர் புலிகளுடன் ஏற்ப்பட்ட நட்புகள் காரணமாக புலிகளுக்கு இவர்களது நடமாட்டம் தெரிவித்து புலிகள் கொல்ல உதவப்பட்டு கொலை செய்யப்பட்டவர்கள்.

9) விடுதலைப்புலிகள் என சந்தேகத்தின் பெயரில் கொல்லப்பட்ட 38 கிழக்கு மாகாணத் தமிழ் இளைஞர்கள் இவர்களின் கொலைகள் ஐநா மற்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பினருக்கு மட்டக்களப்பு மக்களால் வழங்கப்பட்ட தகவல்களும், ரெலோ இணையத் தளத்துக்கு (telo org) கிடைத்த உறுதி செய்யப்பட்ட தகவல்களும் வெளிவந்து பல காலங்கள் ஆகியும் ரெலோ பாராமுகமாக இருக்கின்றது.

இங்கே இந்த மனித உரிமை மீறல்கள் பற்றிய எனது கடிதத்தில் குறிப்பிடப்பட்ட தகவல்களில் உள்ள கொலைகளுக்கு தமிழீழ விடுதலை இயக்கம் பொறுப்பாகும், இந்த கொலைகளில் தொடர்புபட்ட உறுப்பினர்கள் தனிப்பட பொறுப்பாளிகள் அல்ல, ஆகவே தமிழீழ விடுதலை இயக்கம் (இன்றய அரசியல் கட்சி) இந்த செயல்களுக்கான பொது மன்னிப்பை இலங்கை அரசிடமோ, சர்வதேச சமுகத்திடமோ அல்லது சம்பந்தப்பட்ட கொலை செய்யப்பட்டவர்களின் உறவினரிடமிருந்தோ பெற வேண்டும் அல்லது அவர்களுக்குரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.

இதன் மூலமே தமிழீழ விடுதலை இயக்கம் தனது கடந்த காலத்திலிருந்து வெளியே வரமுடியும், அதுவே விடுதலைப்போராட்ட இயக்கத்துக்குரிய முக்கியமான குணாம்சமும் ஆகும்.

இதை தவிர்த்து இவைகள் எல்லாம் பழசு மறைத்து விட்டு போகலாம் என்ற எண்ணம் மக்களுக்கான பொது அமைப்பின் பொறுப்பான நடவடிக்கைகள் அல்ல என்பதை தெரிவிக்கின்றோம்.

இந்த கொலைகளுடன் தொடர்புடைய பலர் ரெலோ உள்ளேயும் புலம் பெயர்ந்தும் இருக்கின்றார்கள். இந்த தனிநபர்கள் மீது இனிமேல் ஆட்சிக்கு வரும் எந்த அரசாங்கங்களும், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எதிரகாலம் உள்ளதை கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

இங்கு குறிப்பிடப்பட்ட பல சம்பவங்களை தொகுப்பு செய்த Holland மனித உரிமைகள் அமைப்பு லண்டனில் ரெலோ பொறுப்பாளர் ஒருவரின் "தானே புலம் பெயர் ரெலோவின் பொறுப்பாளர்" என்ற வாக்கு மூலத்தையும் பெற்றுள்ளார்கள் என்பதையும் கவனத்திற் கொள்ளவும்

தமிழீழ விடுதலை இயக்கம் ஒரு விடுதலைப் போராட்ட இயக்கம் என்றால் தனது அமைப்பினால் கொலை செய்யப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும், அல்லது அவர்களது பொது மன்னிப்பை பெற வேண்டும். தனிப்பட்ட ரெலோ உறுப்பினர்களை இந்த கொலைக் குற்றத்தில் தள்ளிவிட்டு தம்பிக்க கூடாது. இது விடுதலை இயக்கம் என்ற பெயருக்கும் அதன் இயங்கு முறைக்குமான அவமானமாகும்.

நன்றி.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.

த சோதிலிங்கம்.
10/12/2018.

இக்கடித கருத்துக்களை ஆதரிக்கும்:
தமிழீழ விடுதலை இயக்கம் ( uk,Canada,Swiss,France)

தொடர்புகளுக்கு
0784 6322 369(uk)
uktelo@gmail.com, telolondon@gmail.com.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com