Tuesday, December 18, 2018

ஜனாதிபதிக்கு எதிராக கண்டனப் பத்திரிகை கொண்டுவர ரணில் எண்ணவே இல்லையாம். சஜித் பிறேமதாஸ

ஜனாதிபதிக்கு எதிராக கண்டன பத்திரிகையினை கொண்டுவர ஒரு போதும் நினைத்தது இல்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கடந்த 16ம் திகதி பிரதமர் சத்திய பிரமானத்தின் பின்னர் ஜனாதிபதி ஆற்றிய உரையினை தொடர்ந்து இவ்வாறு தெரிவித்துள்ள அவர் மேலும் கூறுகையில்:

நாங்கள் முன்னெடுத்துள்ள பாதையில் நாகரீகமாவும் பிரச்சினைகளின் போது தனிப்பட்ட முடிவுகளை எடுக்காமல் எல்லோரும் ஒருமித்த கருத்துடன் கலந்துரையாடி முடிவுகளை எடுத்து சிறந்த அரசியல்வாதிகளாக செயற்படுதல் வேண்டும்.

எமது கௌரவ பிரதமர் அவர்கள் ஒரு போதும் தங்களுக்கு எதிராக கண்டன பத்திரிகை முன்வைக்க எம்முடன் பேசியதில்லை. அது தொடர்பாக கலந்துரையாடவும் இல்லை. கடந்த காலங்களில் நடைப்பெற்ற அரசியல் சூழ்நிலைகளில் எம்மாலும் ஏனையோராலும் வன்மையான வார்த்தை பறிமாற்றங்கள் இடம் பெற்றன.

ஆயினும் தங்களை சிறைப்படுத்தவோ உடல் ரீதியான பங்கம் ஏற்படுத்தவோ தங்கள் குடும்பத்தினருக்கு பங்கம் விளைவிக்கவோ நாம் ஒரு போதும் எண்;ணியதில்லை என அவர் தெரிவித்திருந்தார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com