Tuesday, December 18, 2018

எதிர்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ச. சபாநாயகர் அறிவிப்பு

நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற மரபுகளுக்கு அமைய, அதிக ஆசனங்களைக் கொண்ட எதிர்க்கட்சி என்ற வகையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த மகிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதாக சபாநாயகர் இன்று அறிவித்தார்.

நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 1 மணிக்கு கூடிய போதே, சபாநாயகர் கரு ஜெயசூரிய இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதனால், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இரா.சம்பந்தனும், எதிர்க்கட்சி பிரதம கொரடாவாக இருந்த அனுரகுமார திசநாயக்கவும் பதவியிழந்துள்ளனர்.

முன்னதாக அதிபர் செயலகத்தில் இன்று முற்பகல் நடந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் மகிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த முடிவை சபாநாயகருக்கு அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக அதிபர் செயலகத்தில் இன்று முற்பகல் நடந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் மகிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பது என்றும் மஹிந்த அமரவீரவை எதிர்கட்சி பிரதம கொரடாவாக நியமிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

எவ்வாறாயினும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சி உறுப்பினர் ஒருவருக்கே எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்க முடியும் என்று கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com