Wednesday, December 26, 2018

அனத்துவகைத் தேர்தலுக்கும் தயாராகுமாறு ஜனாதிபதி அறிவிப்பு...

மலரும் புத்தாண்டில் அனைத்துவகைத் தேர்தல்களையும் எதிர்கொள்ளத் தயாராகுமாறு, ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் பிரிவு ஒருங்கிணைப்பாளர்களுக்கும், மாவட்ட தேர்தல் பிரிவு ஒருங்கிணைப்பாளர்களுக்கும் அறிவித்தல் விடுத்துள்ளார்.

நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, ஜனாதிபதி மேற்படி அறிவித்தலை விடுத்தார். நாட்டின் முன்னேற்றத்தை விரும்பும் மக்களின் பிரதிநிதிகள் அனைவரையும் இணைத்துக் கொண்டு, எதிர்வரும் தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி தெரிவித்ததாக, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் பேராசியர் ரோஹண லக்ஸமன் பியதாஸ தெரிவித்தார்.

நேற்றைய தினம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரோகண லக்ஸமன் பியதாச இதனை ஊடகங்களுக்கு தெரியப்படுத்தினார்.

புது வருடத்தில் புதிய சிந்தனைகளுடன் கட்சியினை மீளக் கட்டியெழுப்பும் செயல்பாடுகளில் ஈடுபடுவதுடன், கட்சியை மேலும் வலுப்படுத்த, ஜனாதிபதி கட்சி ஒருங்கிணைப்பாளர்களை புதிதாக நியமிக்க உள்ளதாக தெரிவித்த பொதுச் செயலாளர், மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெறும் வகையில் செயற்பாடுமாறு ஜனாதிபதி வலியுறுத்தியதாக குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com