Wednesday, December 26, 2018

சுனாமியால் உயிர் நீத்தவர்களுக்கு ஹட்டனிலும் நினைவஞ்சலி.....

சுமாத்ரா தீவில் நிலைகொண்ட ஆழிப்பேரலை ஏற்பட்டு, இன்றுடன் 14 ஆண்டுகள் உருண்டோடியுள்ள நிலையில், இலங்கையின் பல பாகங்களிலும் சுனாமியால் உயிர் நீத்தவர்கள் நினைவுகூரப்பட்டனர்.

சுனாமியால் மரணித்த உறவுகளுக்காக தேசிய அனர்த்த முகாமைத்துவ மையத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட பேரணி, சுனாமி நினைவு மண்டபத்தில் இடம்பெற்றது. இன்று காலை 9.25 தொடக்கம் 9.27 வரையான இரண்டு நிமிடங்களில், ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்த, அனர்த்த முகாமைத்துவ மையம் அனைவருக்கும் அழைப்பு விடுத்தது.

அத்துடன் அனர்த்த முகாமைத்துவ மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி, காலை 8.30 அளவில் ஆரம்பமாகி, காலி மாவட்ட செயலாளர் விதானப்பத்திரனவின் தலைமையில் இடம்பெற்றது.

இதனிடையே சுனாமியில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக ஹட்டன் நகரில் உள்ள விகாரை ஒன்றில், விஷேட பூஜை வழிபாடு இடம்பெற்றது. இதன்போது டிக்கோயா மாநகர சபையின் தலைவர் சடேன் பாலச்சந்திரன், ஹட்டன் நகர காவல்துறை அதிகாரிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு, ஆழிப்பேரலை அனர்த்தத்தில் காவுகொள்ளப்பட்டவர்களுக்குக்கு அஞ்சலி செலுத்தினர்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com