Wednesday, December 26, 2018

காதலனுடன் ஹோட்டலிலிருந்த பிரித்தானிய பெண்ணை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த இருவர் கைது....

பிரித்தானிய பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட இரண்டு இளைஞர்கள், ஹட்டன் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹட்டன் காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட காசல்ட்ரீ நீர்தேக்கத்திற்கு அருகாமையிலுள்ள விடுதியில், குறித்த பிரித்தானிய பெண்ணும், அவரது காதலரும் தங்கியிருந்தபோது மேற்படி சம்பவம் நேற்று இடம்பெற்றதாக ஹட்டன் காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

குறித்த ஜோடி தங்கியிருந்த அறைக்கு அருகேயுள்ள அறையொன்றில் தங்கியிருந்த இளைஞர்கள் இருவர் இணைந்தே மேற்படி முயற்சியினை மேற்கொண்டுள்ளனர். அறையின் கதவை தட்டி வெளியே அழைத்து மிகவும் துணிகரமாக துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டவேளையில், காதலன் ஹோட்டல் நிர்வாகத்தினருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இதனை அடுத்து விடுதி முகாமையாளர் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து, இளைஞர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

சம்பவத்தின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும், எதிர்வரும் வியாழக்கிழமை நீதவான் முன்னணியில் பிசன்னப்படுத்தப்படவுள்ளதாக, ஹட்டன் காவத்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசராணைகளை முன்னெடுத்து வருவதாக, ஹட்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com