Wednesday, December 26, 2018

சம்பந்தனால் கடமைகளை முன்னெடுக்க முடியாதுள்ளாராம் மஹிந்தர்.

முன்னாள் எதிர் கட்சியின் தலைவர் ஆர் சம்பந்தன் அவர்கள் இன்று வரை எதிர் கட்சி காரியாலத்தை தற்போதைய எதிர் கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு கையளிக்காமையால் மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு தனது கடமைகளை செயற்படுத்த முடியாத நிலையில் உள்ளார் என பொதுஜன பெருமுன வட்டாரங்கள் விசனம் வெளியிட்டுள்ளது.

இச்செயற்பாட்டினால் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் கடமைகளை ஏற்கும் நாள் பிற்போடப்பட்டுள்ளது. சம்பந்தன் அவர்கள் இவ்வாறு எதிர்கட்சி ஆசனத்தில் தொங்கி கொண்டிருக்கின்றமைக்கான காரணம் மஹிந்த ராஜபக்ஸ அவர்களால் வழங்கப்படக்கூடிய எதிர்கட்சிகளுக்கான தலைமைத்துவ செயற்பாடுகளை முடக்குவதாகும் என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியினர் ஒருபுறம் எதிர்கட்சி தலைவர் பதவியை மஹிந்தவிற்கு வழங்கிவிட்டு சம்பந்தனை வைத்து காரியாலயத்தை முடக்கியுள்ளதாகவும், சம்பந்தன் ஐக்கிய தேசியக் கட்சியின் கொந்தராத்தினை நிறைவேற்றுவதாகவும் அவர்கள் மேலும் குறை கூறுகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com