Sunday, December 30, 2018

வரப்போகும் ஆண்டில் நாடு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்படும்... எச்சரிக்கை விடுத்தார் பந்துல..

எதிர்வரும் 2019 ஆண்டில் நாடு மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கப் போவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன எச்சரிக்கை விடுத்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே, அவர் இவ்வாறு கூறினார். இலங்கை நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சிப் பாதைக்குள் செல்கிறது. இது குறித்து எந்தவித முன்னேற்றகரமான நடவடிக்கையையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என பந்துல குணவர்தன குற்றம் சாட்டினார்.

இவ்வாறான நிலையில், வரப்போகும் பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ள, அனைவரும் எம்முடன் இணைந்து பயணிக்குமாறு கேட்டு கொண்ட பந்துல குணவர்தன, தேர்தலை நோக்கி பயணிக்க அனைவரும் தயாராகுமாரும் கோரினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com