Monday, December 31, 2018

ஜனாதிபதியின் நெருங்கிய உறவினர்களின் சொத்துவிபரத்தை கேட்டு லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் செல்லும் சட்டத்தரணிகள்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி ஆகிய பின்னர் பல்வேறு வகையில் சொத்து சேர்த்துக்கொண்டுள்ளதாகவும், அச்சொத்துக்களை அவர் தனது உறவினர்கள் பெயரில் சேர்த்து வைத்துள்ளதாகவும் எதிர்தரப்பினர் குற்றஞ்சுமத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஜனாதிபதியின் நெருங்கிய உறவினர்களின் சொத்து விபரம் பற்றி கணக்கெடுப்பு நடத்தும் படி வழக்கறிஞர்கள் சிலர் லஞ்ச ஊழல் விசாரணை கொமிசனுக்கு முறைப்பாடு செய்வதற்கு தயாராகியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

இவ்வழக்கறிஞர் குழுவினர் ஜனாதிபதியின் உறவினர்களின் அசையா சொத்து மற்றும் அசையும் சொத்துகள் தொடரபான சில விடயங்களை லஞ்ச ஊழல் கமிஸனுக்கு சம்ர்ப்பிக்க உள்ளதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com