Monday, December 31, 2018

இஸ்லாமியர்களை அமெரிக்காவுக்கு அடிமையாக்க முற்பட்ட முன்னாள் சவூதி மன்னர் அப்துல் அசீஸ். முகம்மத் இக்பால்

சவூதி அரேபியா என்னும் பரந்த நிலப்பரப்பினைக்கொண்ட தேசத்தினை கட்டியமைத்தவர்களில் மன்னர் அப்துல் அசீஸ் பின் சவூத் அவர்கள் முதன்மையானவர். சிதைந்து கிடந்த பல பிரதேசங்களை ஒன்றாக்கி ரியாத்தினை தலைநகராகக்கொண்டு ஆட்சி அமைத்தார்.

இவர் நல்லவைகள் பல செய்திருந்தாலும் அமெரிக்காவுக்கு முழு இஸ்லாமியர்களையும் அடகுவைத்து அடிமையாக மாற்றி அமைத்த பெருமை மன்னர் அப்துல் அசீஸ் பின் சவூத்தையே சாரும்.

இவரது ஆட்சிக்காலம் 1932 தொடக்கம் 1953 ஆண்டு வரைக்குமாகும். இந்த காலகட்டங்களில்தான் மத்திய கிழக்கில் பல முக்கிய சம்பவங்கள் நடந்தேறியது.

அதாவது பாலஸ்தீனில் அதிகமான யூதர்கள் குடியேறியமை, இஸ்ரேல் என்னும் யூத ராஜ்ஜியம் பாலஸ்தீனில் உருவானது என்பதனை பிரதானமாக குறிப்பிடலாம்.

எதிர்காலங்களில் பரம்பரை பரம்பரையாக சவூதி அரேபியாவை தனது சவூத் குடும்பமே ஆட்சி செய்யவேண்டும் என்று சிந்தித்தாரே தவிர, சியோனிஸ்டுக்களின் ஆக்கிரமிப்பிலிருந்து அராபிய தேசத்தை பாதுகாக்க வேண்டும் என்று சிந்திக்கவில்லை.

தூரநோக்கில் சிந்தித்து தனது குடும்பம் சவூதி ராஜ்ஜியத்தினை ஆட்சி செய்வதற்கான முன்னேற்பாடுகளை செய்ததுடன், அண்டைய இஸ்லாமிய நாடுகளிலிருந்தும், இஸ்லாமிய முற்போக்கு இயக்கங்களிலிருந்தும் பாதுகாப்பதற்காக அமெரிக்காவையே நாடினார்.

அத்துடன் யூதர்களை இவர் பகைத்துக்கொள்ள விரும்பவில்லை. யூதர்களுக்கு எதிராக செயல்பட்டால் அது அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளின் நட்பினை பாதிக்கும் என்ற காரணத்தினால் அமெரிக்காவுக்கு எதையெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் தாரைவார்த்துக் கொடுத்த பெருமை மன்னர் அப்துல் அசீசையே சாரும்.

அமெரிக்காவை தன்வசப்படுத்திக் கொள்வதற்காக அன்றைய அமெரிக்க ஜனாதிபதியுடன் அப்துல் அசீஸ் அவர்கள் ஓர் பெற்றோலிய ஒப்பந்தத்தினை செய்து அதன் மூலம் சவூதி அரேபியாவின் எண்ணை வளத்தினை முழுமையாக அமெரிக்காவிடம் ஒப்படைத்தார்.

அதுமட்டுமல்லாமல் டொலர் நாணயத்துக்கு மட்டுமே மசகு எண்ணையினை சவூதி அரேபியா விற்பனை செய்ய வேண்டும் என்ற அமெரிக்காவின் நிபந்தனையை ஏற்று டொலருக்கே சவூதி அரேபியா எண்ணையை விற்பனை செய்ய ஆரம்பித்தது.

இதற்கு நன்றிக்கடனாக சவூதிக்குரிய ஆயுத விநியோகம் மற்றும் இராணுவ பாதுகாப்பினை அமெரிக்கா வழங்க ஒப்புக்கொண்டது. இது முழு சவூதிக்குமான பாதுகாப்பு என்பதனைவிட அரச குடும்பத்துக்கான பாதுகாப்பு என்பதே பொருத்தமானது.

இந்த காலகட்டத்தில்தான் ஜேர்மனியிலிருந்தும், உலகின் பல பாகங்களிலிருந்தும் யூதர்கள் பெருமளவில் பலஸ்தீனை நோக்கி குடியேற தொடங்கினார்கள். இதனை பாலஸ்தீன மக்கள் எதிர்க்க ஆரம்பித்தார்கள்.

பாலஸ்தீன் நோக்கிய யூதர்களின் வருகைக்கு சவூதி மன்னர் அப்துல் அசீஸ் அவர்கள் பாலஸ்தீன மக்களுடன் சேர்ந்து தனது பலமான எதிர்ப்பினை வெளியிட்டிருந்தால் யூதர்களின் வருகை பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். இஸ்ரேல் என்னும் தேசம் மத்தியகிழக்கில் உருவாகுவதற்குரிய சாத்தியங்கள் குறைவாகவே இருந்திருக்கும்.

ஆனால் மன்னர் அப்துல் அசீஸ் அவர்கள் யூதர்களின் வருகைக்கு முழுமையான ஆதரவினை வழங்கியிருந்தார்.

இருந்தாலும் அதிகமான யூதர்களின் வருகையினை எதிர்த்து பாலஸ்தீன மக்கள் போராட ஆரம்பித்தார்கள். ஆனால் இந்த பாலஸ்தீனர்களின் போராட்டத்தினை பிரித்தானிய அரசினால் கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால், மன்னர் அப்துல் அசீஸ் மூலமாக பாலஸ்தீனர்களை கட்டுப்படுத்துவதற்கு பிரித்தானியா முயற்சி செய்தது.

சலுகைகளை வழங்கி உரிமை போராட்டத்தினை கைவிட செய்கின்ற நடவடிக்கைகளில் மன்னர் அப்துல் அசீஸ் செயல்பட்டார். பின்னாட்களில் புனித ஸ்தளங்களில் ஒன்றான பைத்துல் முகத்தஸ் யூதர்களினால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதற்கு பொறுப்பு கூறவேண்டியவர்களில் இவர் முதன்மையானவர்.

தொடரும்..............

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com