Friday, December 28, 2018

கிடைக்கும் முதலாவது சந்தர்பத்திலேயே அரசை கவிழ்போம். எஸ்பி சூழுரை

சந்தர்பம் ஒன்று கிடைக்குமாயின் அதன் முதற் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தை கவிழ்த்து புதிய அரசொன்றை நிறுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என முன்னளாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஒன்று மூலமாகவோ அல்லது வேறு விதமாகவோ அது மேற்கொள்ளப்படுமெனக்கூறும் அவர், விரைவில் தேர்தல் ஒன்றை நடாத்துவதற்கு பாராளுமன்றில் முன்மொழிவு ஒன்று செய்யப்பட்டால் தமது கட்சி அதற்கு பூரண ஆதரவு வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

நாட்டை நேசிக்கின்ற உறுப்பினர்கள் கட்சி பேதங்களை மறந்து அவ்வாறானதோர் முன்மொழிவுக்கு ஆதரவு வழங்கவேண்டும் என்றும் அவர் வேண்டுதல் விடுத்தார்.

குறிக்கப்பட்ட காலத்துக்கு முன்னர் தேர்தல் நடைபெறாவிட்டால் ஏதாவது ஒரு முறையில் அரசாங்கத்தை கவிழ்த்து புதிய அரசொன்றை நிறுவுவதென்றால் தமது குழு அதற்கு பூரண ஆதரவை தர தயாராகவிருக்கின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com