Friday, December 28, 2018

தருவோம் என்று ஏமாற்றி விட்டார்கள்! தராவிட்டால் கடும் நடவடிக்கை! அழுகின்றார் ராதாகிருஷணன்.

தமக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படாமை குறித்து, அரசாங்கத்தின் மீது அதிருப்தி கொண்டுள்ளதாக, முன்னாள் கல்வி ராஜாங்க அமைச்சரும், ஐக்கிய தேசிய முன்னையின் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன் கூறினார்.

அமைச்சு பதவி நிச்சயம் வழங்கப்படும் என்று தம்மிடம், வாக்குறுதி அளித்தபோதிலும், அது நிறைவேற்றப்படவில்லை என்று தெரிவித்த அவர், அரசாங்கத்தின் தற்போதைய வேலைத்திட்டம் தளம்பியுள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.

இதேவேளை இன்னும் ஒரு மாதத்தில், தமக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவி வழங்கப்படவில்லை என்றால், அரசாங்கத்திற்கு எதிராக கடும் நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், பாலித்த ரங்கே பண்டார எச்சரித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com