Friday, December 28, 2018

தமிழில் படிவங்கள் வேண்டும். தெஹிவளை காவல்துறையினருக்கு எச்சரிக்கை விடுக்கும் தமிழ் மக்கள்.

தமிழ் மக்களுக்கு, காவல்துறை பதிவுகளை மேற்கொள்வதற்கென விநியோகிக்கப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் அனைத்தும் சிங்கள மொழியில் காணப்படுவதால், தமிழ் மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

தெஹிவளை காவல்துறைப் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தமிழ் மக்களுக்கே மேற்படி சிங்கள மொழியிலான விண்ணப்பப் படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

பலமுறை, தமக்கு தமிழ் மொழியிலான விண்ணப்பப் படிவங்களை வழங்குமாறு கோரிக்கை முன்வைத்த போதிலும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து அக்கறை செலுத்தவில்லையென தெஹிவளை பகுதியிலுள்ள தமிழ் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தெஹிவளை காவல்துறையினரின் இத்தகைய செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கது எனக் கூறிய தமிழ் மக்கள், இந்த நிலை தொடருமானால் காவல்துறையினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதேநேரம், இனிவரும் காலங்களில் பதிவுகள் எதுவும் இடம்பெறாது என அமைச்சர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக தான் தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் பேசியுள்ளதாகவும், தொடர்ந்தும் அவர்கள் அவ்வாறன நடைமுறைக்கு மக்களை நிர்பந்தித்தால் தனக்கு குறுஞ்செய்தி அனுப்புமாறும் அவர் வேண்டியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com