Thursday, December 27, 2018

ஐ.நா வின் தீர்மானத்திற்கு இலங்கை ஆதரவு.

மரண தண்டனையை தள்ளுபடி செய்வதற்கான ஐக்கிய நாடுகளின் தீர்மானத்திற்கு இலங்கை ஆதரவாக வாக்களித்துள்ளது.

பிரேஸிலினால் முன்மொழியப்பட்ட இந்த பிரேரணையானது ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 73ஆவது சிறப்பு அமர்வின்போது பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கை உள்ளிட்ட 121 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவளித்த நிலையில், 35 நாடுகள் எதிர்த்து வாக்களித்ததுடன், 32 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துக் கொள்ளவில்லை.

இந்நிலையில், சர்வதேச தரங்களை மதித்து மரண தண்டனையை எதிர்நோக்கியவர்களின் உரிமையை பாதுகாக்குமாறு அனைத்து நாடுகளுக்கும் ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.

சிறைச்சாலைக்குள் இருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுவருவர்களுக்கு மரண தண்டனையை அமுல்படுத்த உள்ளதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஜுலை மாதம் அறிவித்தார்.

ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் மத்தியில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது.இவ்வாறானதொரு நிலையில் மரண தண்டனையை தள்ளுபடி செய்வதற்கு இலங்கை ஆதரவளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com