Monday, December 31, 2018

மஹிந்தவின் கனவு புஷ்வானமாகி போகும்... காவிந்த ஜயவர்தன

முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ச, எதிர்க்கட்சி தலைவராக வர வேண்டும் என நினைப்பது, புஷ்வானமாகி போகும் என, ஐக்கிய தேசிய கட்சி அடித்து கூறுகிறது.

மஹிந்த ராஜபக்ச இன்று, பாராளுமன்ற உறுப்பினர் என்பது கூட சந்தேகத்திற்கு இடமானதாகவே உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன கூறியுள்ளார். 2015 தொடக்கம் மஹிந்த ராஜபக்ச எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற பரவலாக முயன்று வருவதாக கூறிய அவர், மஹிந்தவின் சதி திட்டம், பலிக்காமலேயே போகும் என குறிப்பிட்டார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி, ஜனாதிபதி எடுத்த அவசர முடிவால், நாட்டில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. எனினும் ஐக்கிய தேசிய கட்சி ஜனநாயக ரீதியில் போராடி, நீதிமன்றத்தின் மூலம் சகலருக்கும் பாடம் புகட்டியுள்ளதாக காவிந்த ஜயவர்தன கூறியுள்ளார்.

அத்துடன் வரப்போகும் புத்தாண்டு, ஐக்கிய தேசிய கட்சிக்கு வெற்றிகள் கிட்டும் ஆண்டாகவே அமையுமெனவும் அவர் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com