Saturday, December 8, 2018

மஹிந்த - மைத்திரி ஒரே சின்னத்தில் தேர்தல் களத்தில். மஹிந்தவே தலைவர்.

நேற்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபுர்வ இல்லத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்தியகுழு சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது வரும் பொது தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனையும் ஒன்றினைந்து ஓரு சின்னத்தில் போட்டியிடுவதற்கான பேச்சு வார்த்தைகள் இடம் பெற்றன. ஆயினும் இறுதி தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.

ஸ்ரீ.சு.கட்சியின் பொது செயலாளர் கருத்து வெளியிடுகையில் கூட்டமைப்பின் கட்சி தலைமை பொறுப்பை முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கே வழங்க தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டார்.

அத்தோடு எதிர்வரும் பொது தேர்தலில் இருக்கட்சிகளும் ஒன்றினைந்தே களமிறங்க போவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com