Sunday, December 23, 2018

ஆட்டத்தை தொடங்கினார் ரவி கருணாநாயக்க

மின்சக்தி அமைச்சராக ரவி கருணாநாயக்க நியமனம் பெற்ற மறுகணமே இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக தம்மிக பெரோராவை நியமிக்க தீர்மானித்து தம்மிக பெரோராவுக்கு இது தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளதாகவும் நம்பதகுந்த வட்டாராங்களில் இருந்து தெரியவருகின்றது.

பிரபல வர்த்தகரான தம்மிக பெரேரா ஹெலிஸ் நிறுவனம், சம்பத் வங்கி, பேன்ஏசியா வங்கி, ரோயல் செரமிக் நிறுவனம் போன்ற பல நிறுவனங்களின் பங்குதாராக உள்ளார். பல தனியார் நிறுவனங்களின் பங்குதாரரான இவரை அரச நிறுவனம் ஒன்றின் தலைவராக நியமிப்பதன் ஊடாக அங்கு பல்வேறு பட்ட மோசடிகள் இடம்பெறுவதற்கு வாய்ப்பு உண்டென அவதானிகள் தெரிவிக்கின்றனர். இவ்வாறே பிரபல வியாபாரியான அர்ஜூன மகேந்திரனை மத்திய வங்கியின் ஆழுநராக நியமித்து அவர் பில்லியன் கணக்கில் நாட்டு மக்களின் பணத்தை சூறையாடினார் என்பது யாவரும் அறிந்த விடயம

மின்சாரசபையின் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் அழைப்பு விடுவிக்கப்பட்ட போதிலும் வெளிநாடு சென்றுள்ள தம்மிக்க பெரேரா எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை என்றும் அறியக்கிடைக்கின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com