Sunday, December 23, 2018

அடித்தார் அசிட் கலா அந்தர் பல்டி. புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டியதில்லையாம் !!

ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் சற்று காலத்திற்கு முன்னர் யாழ்பாணத்தில் இடம்பெற்ற அரச நிகழ்வொன்றில் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இக்கருத்து தென்னிலங்கையில் பாரிய எதிர்ப்பலைகளை உருவாக்கியதுடன் அலரிமாளிகைக்கு விஜயகலாவை அழைத்த கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பதவியை ராஜனாமா செய்யுமாறு உத்தவிட்டார். பதவியிழந்த விஜயகலாமீது சாட்டுப்போக்குக்கு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் பின்னர் புதிய அமைச்சரவையில் ராஜாங்க கல்வியமைச்சர் பதவி விஜயகலாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

பதவியேற்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அசிட் கலா தான் ஒருபோதும் புலிகளை உருவாக்க வேண்டும் என கூறவில்லை எனவும் யாழ்பாணத்திலுள்ள நிர்வாக பிரச்சினை தொடர்பாக பேசியதை ஊடகங்கள் திரிவுபடுத்தி விட்டன என்றும் தெரிவித்துள்ளார்.






0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com