Sunday, December 23, 2018

வருகின்றது மூன்று கூட்டமைப்பு.

எதிர்வரும் தேர்தல் காலங்களில் மூன்று கூட்டமைப்புக்கள் உருவாக உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய தேசிய கட்சி சிறுபாண்மைக் கட்சிகளுடன் இணைந்து செயற்பட இணக்கம் ஏற்ப்பட்டுள்ளதாகவும் கட்சியின் புதிய பெயராக ஜனநாயக கூட்டமைப்பு என்ற பெயரில் எதிர்வரும் தேர்தலின் போது போட்டியிட தீர்மானித்துள்ளது.

அத்தோடு பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஓன்றினைவதோடு சிறு கட்சிகளுடன் இணைந்து செயற்பட கலந்துரையாடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அல்லாத புதுப்பெயரில் களமிறங்கவுள்ளதாக அறியமுடிகின்றது.

பிரதான கட்சிகளில் இருந்து விலகிய அரசியல் பிரமுகர்கள் ஒன்றினைந்து கூட்டனி ஒன்றை ஏற்ப்படுத்தி தேர்தல் களத்தில் போட்டியிட ஒரு தரப்பினர் திட்டமிட்டு வருகின்றனர். இத்தரப்பிற்கு பெரும்பாலும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க தலைமை தாங்குவார் என்று பேசப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com