Sunday, December 23, 2018

சப்ராவின் பழி சரவணபவனை தமிழரசுக் கட்சியினுள்ளும் கலைக்கின்றது..

யாழ் குடாநாட்டில் ஆயிரக்கணக்கான யுவதிகளின் வாழ்வில் விளையாடி நூற்றுக்கணக்கானோரை தற்கொலைக்கு தள்ளிய மாபெரும் குற்றவாளிதான் இன்றைய தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவான்.

உதயன் பத்திரிகையை கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பை மிரட்டி வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்று பாராளுமன்ற கதிரையை தட்டிப்பறித்துக்கொண்டிருக்கும் சரவணபவானுக்கு கூட்டமைப்பினுள்ளும் பலத்த எதரிர்ப்புக்கள் காணப்படுகின்றது.

அந்தவகையில் வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சயந்தனுக்கும் சரவணபாவானுக்குமிடையே நீண்ட காலமாக பனிப்போர் ஒன்று நிகழ்ந்து வருகின்றது.

தமிழ் மக்களுக்கு சேவை செய்யவென அவர்களின் வாக்குகளை அபகரித்து சுகபோகம் அனுபவிக்கும் மேற்படி உறுப்பினர்கள், மக்கள் சேவைக்கு பதிலாக தங்களுள் அடிபட்டு காலத்தையும் நேரத்தையும் போக்குகின்றமை தொடர்பில் மக்கள் தங்களது விசனத்தை வெளியிடுகின்றபோது, சயந்தன் தரப்பினர் இணையத்தளம் கீழ்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

'சரவணபவன்- சயந்தன் மோதல் இன்று நேற்று ஆரம்பித்ததல்ல. சரவணபவன் முகாமைத்துவத்தில் அங்கம் வகித்த ஷப்றா நிதி நிறுவனத்தினால் ஏமாற்றப்பட்ட குடும்பங்களில் சயந்தனின் குடும்பமும் ஒன்று.

சயந்தனின் பாட்டி தனது இறுதிக்காலத்தில் தனது பராமரிப்புச் செலவுகளுக்காக ஒருதொகைப் பணத்தை ஷப்றா நிதிநிறுவனத்தில் வைப்பிலிட்டுள்ளார். ஆனால் சிலவருடங்களிலேயே பலநூற்றுக்கணக்கான பொதுமக்களின் வைப்புப் பணத்தை முகாமைத்துவமும், பங்களரும் கபளீகரம் செய்து விட்டார்கள். இதனால் தற்கொலை செய்து கொண்ட குடும்பங்கள் பல. தமது பெண்பிள்ளைகளின் திருமணத்திற்காக சீதனம் கொடுக்க பெற்றோரினால் சேமித்த பணம் இவ்வாறு மோசடி செய்யப்பட்டதால் திருமணமாகாமலே ஏராளம் யாழ்ப்பாணத் தமிழ் பெண்கள் இன்றும் முதிர்கன்னிகளாக உள்ளனர்.

சயந்தனது பாட்டி இறுதிவரை போராடியும் முகாமைத்துவம் அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுக்கவேயில்லை. தனது மரணச்செலவுக்காவது அந்தப்பணத்தை தனது பேரனான சயந்தனிடம் ஒப்படைக்குமாறு கடிதம் எழுதிவிட்டு சயந்தனது பாட்டி இறந்துள்ளார். சயந்தன் தனது ஆதரவாளர் மத்தியில் இந்த விபரங்களை தெரிவிக்க அதனை யாரோ ஒருவர் சரவணபவனிடம் போட்டுக் கொடுக்க ஆரம்பமானதுதான் சரவணபவன்- சயந்தன் முறுகல்.'

அண்மையில் அராலிப்பகுதியில் குள்ளமனிதன் வருகிறான் என்று மக்களை பீதிக்குள்ளாக்கி அதில் அரசியல் இலாபம் தேட முனைந்த சரவணபவனின் பக்கா பிளானுக்கும் ஆப்படித்தவர் இந்த சயந்தன்தான் என்பது குறிப்பிடத்தக்கது“ என அந்த தகவல் குறிப்பிடுகிறது.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com