Wednesday, December 26, 2018

சிஐடி ஜனாதிபதி கொலைச்சூழ்சியை மூடி மறைக்க முற்படுகின்றது. மேலும் விடயங்களை அம்பலப்படுத்துவேன். மிரட்டுகின்றார் நாமல்.

ஜனாதிபதி கொலை சதித்திட்டம் தொடர்பான விசாரணைகளை மூடிமறைக்க, குற்றப் புலனாய்வு அதிகாரிகள் முயற்சிப்பதாக தெரிவித்த நாமல் குமார, விரைவில் இது குறித்து சகல விடயங்களையும் வெளியிடுவதாக மீண்டுமொரு அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதியின் கொலை சூழ்ச்சி தொடர்பிலான விசாரணைகளை குற்றப்புலனாய்வு துறையினர் மந்த கதியில் முன்னெடுப்பதாக குற்றம் சுமத்திய நாமல் குமார, விசாரணையுடன் தொடர்புடைய தகவல்களை இனந் தெரியாத நபர் ஒருவர், ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளதாக கூறினார்.

அம்பாறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, நாமல் குமார இந்த அதிர்ச்சித் தகவலைகளை வெளிப்படுத்தினார். அத்துடன் தனது பாதுகாப்பினையும் விசேட அதிரடிப்படை வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நாமல்குமாரவின் மேற்படி கருத்துக்களுக்கு மறுப்பு தெரிவித்த காவல்துறை ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர, நாமல் குமாரவிற்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com