Friday, December 28, 2018

கடந்த எட்டு மாதங்களில் மட்டும் 320 கொலைச் சம்பவங்கள் பதிவு...

கடந்த எட்டு மாதங்களில் மட்டும் சுமார் 320 நபர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக, காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

இக்கொலைகளில் 200 கொலைகள், பாதாள குழுக்களின் மோதல்களால் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த காவல்துறை, ஏனைய கொலைகள், குடும்பத்த தகராறு, இனக் குழுக்களுக்கு இடையிலான மோதல் முதலான சம்பவங்களால் பதிவானதாக கூறியது.

இந்த மனிதப் படுகொலைகளையும் தாண்டி, பல்வேறு ஆயுதமுனைக் கொள்ளைச் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 252 கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. அத்துடன் இக்குற்றங்களுக்காக பயன்படுத்தப்பட்ட 300 ற்கும் மேற்பட்ட ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இவ்வாறு கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களும் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த காவல்துறை, இது குறித்த மேலதிக விசாரணைக்காய் முன்னெடுத்து வருவதாக தெரிவித்தது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com