Friday, December 28, 2018

புத்தர் சிலையை உடைத்தவரை கம்பத்தில் கட்டிவைத்து அடித்து பொலிஸாரிடம் பாரமளித்த மக்கள்.

மாவனெல்ல பகுதியில் கடந்த தினம் புத்தர் சிலை உடைக்கப்பட்டமை, பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது குறித்து நாடு முழுவதும் பரவலாகப் பேசப்பட்ட நிலையில், தற்போது புத்தர் சிலையை உடைத்தவர் என்று சந்தேகிக்கப்பட்டவர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

இன்று அதிகாலை சந்தேகத்திற்கு இடமான முறையில், மோட்டார் வாகனத்தில் இருவர் பயணித்ததைக் கண்ட மாவனெல்ல பகுதி மக்கள், அவர்களை மடக்கிப் பிடித்தனர். இதன்போது ஒருவர் தப்பியோடிய நிலையில், மற்றைய இளைஞர் பொது மக்களிடம் பிடிபட்டார்.

பிடிபட்ட இளைஞரை அப்பகுதியில் உள்ள மின்கம்பம் ஒன்றில் கட்டி வைத்த பின்னர், பிரதேச மக்கள், அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் வaழங்கியுள்ளனர்.

தகவலறிந்த காவல்துறையினர், சந்தேக நபரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். முன்னதாக இன வன்முறைகளைத் தூண்டும் வகையில், சில குழுக்களால் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டன. அது குறித்த விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், இந்த கைது இடம்பெற்றுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com