Friday, December 28, 2018

அரியநேந்திரனை மீண்டும் பாராளுமன்று கொண்டு செல்ல சீஐடி முயற்சி.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான அரியநேந்திரன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை செய்யப்பட்டதாக செய்திகள் உலாவருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு கடந்த இரு தேர்தல்களிலும் மண்கவ்வியுள்ளார் அரியநேந்திரன். அரியநேந்திரனை மக்கள் அவ்வாறு நிராரித்தமைக்கான காரணம் அவர் பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த குறுகியகாலத்தினுள் பெரும் சொத்து சேர்த்தார் என்பதாகும்.

செல்லாக்காசாகியுள்ள அரியநேந்திரனை விசாரணைக்கு அழைத்து 3 மணி நேரத்தை செலவிட்டதன் ஊடாக, சீஐடி யினர் அவரது இனவாத பிரச்சாராத்திற்கு வழிசமைத்துக்கொடுத்துள்ளனர்.

இவ்விடயத்தினை வைத்து அரியநேந்திரன் தனது வாங்கு வங்கியில் ஏற்பட்டுள்ள ஓட்டையை அடைக்க முற்படலாம் என அம்பிளாந்துறை மக்கள் ஆத்திரம் கொண்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com