Wednesday, November 7, 2018

ஜனாதிபதியின் கட்டளைக்கு மட்டுமே கட்டுப்படுவாராம் பூஜித.

முன்னாள் பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கான பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் அளவை அதிகரிக்குமாறு முன்னாள் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சரின் மேற்படி வேண்டுதல் கடிதத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸ் மா அதிபரிடம் நேரடியாக எடுத்துச் சென்றிருந்தனர்.

மேற்படி வேண்டுதலை நிராகரித்துள்ள பொலிஸ் மா அதிபர், பிரமுகர்களுக்கான பாதுகாப்பு தொடர்பாக பொலிஸ் ஒழுங்கு நியதிகளின் பிரகாரம், முன்னாள் பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கான பாதுகாப்பு அதிகாரிகளை முன்னர் இருந்த அளவுக்கு அதிகரிக்க முடியாது என கூறியுள்ளார்.

அத்துடன் சட்டம் , ஒழுங்கு அமைச்சுப் பொறுப்பை ஜனாதிபதி வகிப்பதால் அவரின் உத்தரவுகளையே பின்பற்றுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்விடயங்களை கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றிலும் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com