Wednesday, November 7, 2018

இன்று நாட்டு மக்களுக்கு தேவைப்படுவது ஜனநாயகம் அல்ல, மூன்று நேர உணவு. முத்தையா முரளிதரன்.

அரசியல் பிரச்சினைகளுக்கு முன்னர் முதலில் இலங்கை மக்கள் மூன்று வேளை உணவையும், தமது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியையுமே மக்கள் எதிர்பார்க்கின்றனர் என கிரிக்கட் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசில் நிலைமைகள் தொடர்பில் லண்டன் பிபிசி யின் சிங்கள சேவைக்கு மேற்கண்டவாறு தெரிவித்துள்ள அவர், மனித உரிமைகள் தொடர்பிலும், கடந்த காலங்கள் தொடர்பிலும் விவாதிக்கின்ற தமிழ் அரசியல்வாதிகள், மக்களது அடிப்படை தேவைகள் குறித்து அவதானம் செலுத்துவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இந்த கோரிக்கை தொடர்பில் வடக்கு, தெற்கு என்று எந்த பகுதியில் உள்ள அரசியல்வாதிகளும் அவதானம் செலுத்துவதில்லை.

மக்களது அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து அவதானம் செலுத்தாமல், ஜனநாயகம், மனித உரிமை போன்ற விடயங்கள் குறித்து வாதிடுவதால் என்ன நன்மை ஏற்படும் என்று தமக்கு புரியவில்லை என்றும் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com