Tuesday, November 13, 2018

புலிகளின் பின்கதவு விளையாட்டை போட்டுடைத்தார் ரணில் விக்கிரமசிங்கே.

தேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் எனினும் அவற்றை கடுமையாக நிராகரித்தேன் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் அசமந்த நிலை மற்றும் தன்மீது ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மக்களுக்கு தெரியப்படுத்தும் நோக்கில் மேற்கொண்ட விசேட உரையிலேயே அவர் இவ்விடயத்தை முதற்தடவையாக வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்தவையாவது, அரசியல்வேறு தனிமனித விருப்பு வெறுப்புக்கள் வேறு, எனது விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் நான் இரு தடவைகள் இருவேறு ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு இடம்கொடுத்துள்ளேன். நான் ஜனாதிபதி வேட்பாளராக நின்றபோது புலிகள் இருதடவைகள் என்னுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள தூது அனுப்பினர், ஆனால் எனது வெற்றிக்காக நான் நாட்டுக்கு துரோகி ஆக நினைக்கவில்லை.

நான் அவ்வாறு செய்தது இந்நாட்டின் ஜனநாயகத்தை நிலைநாட்டவே என்றும் தெரிவித்துள்ளார் ரணில் விக்கிரம சிங்க.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com