Friday, November 2, 2018

நானே அமித் வீரசிங்கவை காட்டிக்கொடுத்தேன். அவன் 1000 விகாரைகள் மீது கல்வீச திட்டமிட்டிருந்தான். நாமல்.

கண்டி மாவட்­ட­மெங்கும் பர­விய இன வன்­மு­றைகள் தொடர்பில் கைதான மஹ­சொஹொன் பல­காய தலைவன் அமித் வீர­சிங்க, அப்­போது முழு நாட்­டிலும் பாரிய குழப்­பத்தை ஏற்­ப­டுத்த திட்­ட­மிட்­ட­தாக, பொலிஸ் உள­வா­ளி­யான நாமல் குமார தெரி­வித்தார்.

அமித் வீர­சிங்க உள்­ளிட்ட சந்­தேக நபர்கள் கைதான தினத்தில் நாட்டில் 100 விகா­ரைகள் மீது கல்­வீச்சு தாக்­குதல் நடாத்தி குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தவும், 119 பொலிஸ் அவ­சர அழைப்புப் பிரி­வுக்கு அழைத்து பள்­ளி­களில் குண்­டுகள், ஆயு­தங்கள் இருப்­ப­தாக கூறி பதற்­றத்தை தோற்­று­விக்­கவும் திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­த­தாக அவர் மேலும் தெரி­வித்தார்.

கண்டி - தெல்­தெ­னிய - திகன வன்­மு­றைகள் தொடர்பில் கைதான மஹ­சொஹொன் பல­காய தலைவன் அமித் வீர­சிங்க உள்­ளிட்ட சந்­தேக நபர்கள் 7 மாதங்­களின் பின்னர் பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்ள நிலையில், பிணையில் வந்த அமித் வீர­சிங்க ஊட­கங்­க­ளுக்கு தெரி­வித்த கருத்­துக்கள் தொடர்பில் பதி­ல­ளிக்கும் போதே நாமல் குமார இவற்றை வெளிப்­ப­டுத்­தினார்.

கண்டி, தெல்­தெ­னிய - திகன பகு­தி­களில் அரங்­கே­றிய இன வன்­மு­றைகள் தொடர்பில் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர் தனது வீட்டில் வைத்து தான் உட்­பட 10 பேரைக் கைது செய்­த­தாக தெரி­விக்­கப்­பட்ட போதும் அன்­றைய தினம் மொத்தம் 11 பேர் கைது செய்­யப்­பட்­ட­தாக அவ்­வி­வ­கா­ரத்தில் அமித் வீர­சிங்க தெரி­வித்­தி­ருந்தார். இதன்­போது 11 ஆவ­தாக கைது செய்­யப்­பட்ட நபர், ஜனா­தி­பதி மைத்­திரி - கோத்தா கொலை சதி குறித்த தக­வல்­களை வெளிப்­ப­டுத்­திய நாமல் குமார எனக் கூறிய அவர், அவரை பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா இடை நடுவே விடு­வித்­த­தாக கூறி­யி­ருந்தார்.

இதற்கு பதி­ல­ளிக்கும் வித­மா­கவே நாமல் குமார மேற்­படி விட­யங்­களை வெளிப்­ப­டுத்­தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறி­ய­தா­வது,

கண்டி - திகன இன வன்­முறை தொடர்பில் அமித் வீர­சிங்க கைது செய்­யப்­பட்ட அந்த இரவில் நாட­ளா­விய ரீதியில் 100 விகா­ரைகள் மீது கல்­வீச்சு தாக்­குதல் நடாத்த திட்­ட­மிட்­டி­ருந்தார். இது குறித்து அவர் உள்­ளிட்டோர் கலந்­து­ரை­யாடும் போது மறு புறத்தில் என்­னூ­டாக அந்த தக­வல்­களை பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா கேட்­டுக்­கொண்­டி­ருந்தார்.

அதே போன்று எம்­மிடம் ஒரு குரல் பதிவு ஆதாரம் உள்­ளது. அதா­வது, அமித் வீர­சிங்க அன்­றைய இரவு நாட­ளா­விய ரீதியில் பாரிய குழப்­பத்தை ஏற்­ப­டுத்த திட்­ட­மிட்டார். முஸ்லிம் பள்­ளி­களில் குண்­டுகள், ஆயு­தங்கள் உள்­ள­தா­கவும் அவற்றை தாம் கண்­ட­தா­கவும் 119 பொலிஸ் அவ­சர அழைப்பு இலக்­கங்­க­ளுக்கு தகவல் கொடுத்து குழப்பம் ஏற்­ப­டுத்­து­வதே அந்த திட்­ட­மாகும். இது குறித்து நான் சி.ஐ.டி.க்கு வாக்கு மூலங்கள் வழங்­கி­யி­ருக்­கின்றேன். அவ­சியம் ஏற்­பட்டால் அந்த சாட்­சி­களை ஊட­கங்­க­ளுக்கு தரவும் தயா­ராக உள்ளேன்.

உண்­மையில் அமித் வீர­சிங்க நானும் அவ­ரது வீட்டில் இருந்த போது தெல்­தெ­னிய - திகன வன்­மு­றைகள் குறித்து கைது செய்­யப்­பட்­ட­தாக கூறி­யி­ருந்தார். இதனை அவர் கூறத் தேவை­யில்லை. நானே கூறுவேன். ஆம் நான் அவ­ரது வீட்டில் தான் இருந்தேன். இந்த கும்­பலின் தக­வல்­களை வெளிப்­ப­டுத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா என்­னையே உள­வா­ளி­யாக அனுப்­பி­யி­ருந்தார். அங்­கி­ருந்த வண்­ணமே மேற்­படி அனைத்து தக­வல்­க­ளையும் வழங்­கி­யி­ருந்தேன். இந் நிலையில் அமித்தின் வீட்டைச் சுற்­றி­வ­ளைத்த பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர் என்­னையும் சேர்த்துத் தான் கைது செய்து ஜீப்பில் ஏற்­றினர். எனினும் அவர்­க­ளுக்கு என்னை தெரி­யாது. அனை­வ­ரையும் அவர்கள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலகவிடம் அழைத்துச் சென்ற போது அமித் உள்ளிட்ட 10 பேரையும் ஒரு வாகனத்தில் ஏற்றிய அவர் என்னை பிறிதொரு வாகனத்தில் ஏற்றி கைவிலங்கை அகற்றி என்னை விடுவித்தார். இது ஒன்றும் அமித் வீரசிங்க கூற வேண்டியதில்லை. நானே பல முறை கூறியிருக்கின்றேன் என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com