Thursday, October 4, 2018

மல்லிகை மொட்டுவின் தலைமைப் பதவியை ஏற்க மஹிந்தர் தயாராம்.

ஸ்ரீ லங்கா மக்கள் முன்னணியின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்வதற்கு தான் தயாரா இருப்பதாக தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச.

நேற்று முன்தினம் அவரது வாசஸ்தலத்தில் இடம்பெற்ற பொது எதிரணியினருடனான சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்கள் இது தொடர்பில் கேட்டபோது, கட்சியின் தலைமைத்துவத்தை பாரமெடுப்பதற்கான காலம் கனித்துள்ளதாக தெரிவித்துள்ளார் மகிந்த ராஜபக்ச.

ஸ்ரீ லங்கா மக்கள் முன்னணியின் தலைவராக பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் உள்ளார். கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் மாதங்களில் கூடவுள்ளது. அதன்போது ஜீ எல் பீரிஸ், மஹிந்த ராஜபக்சவிடம் தனது கட்சியின் தலைமைப்பதவியினை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுதல் விடுக்கவுள்ளார் என கட்சியின் உள்வட்டாரங்களிலிருந்த இலங்கைநெட் அறிந்து கொள்கின்றது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com