Monday, October 1, 2018

பயங்கரவாத சட்டத்தை நீக்கி பயங்கரவாதிகளை விடுதலை செய்! வரதர் – சந்திரகுமார் கூட்டு கோரிக்கை.

சொல்! சொல்! டக்ளஸை கொல்லவந்ததாக அடைத்து வைத்துள்ளவர்களை விடுதலை செய்யச் சொல்!

தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு பயங்கரவாத அமைப்பு என முழக்கமிட்டவர்களில் முன்னணியில் நின்றவர்களில் முக்கியமானவர் வரதராஜபெருமாள் பின்னணியில் ஒழிந்திருந்து புலிகள் பயங்கரவாதிகள்தான் என்றவர்ளில் முக்கியமானவர் சந்திரகுமார். இவ்விருவரும் 2009 மே 17 வரை வடகிழக்கிற்கு செல்வதாக இருந்தால் பெரும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடனே சென்று வந்தனர் என்பது யாவரும் அறிந்தது. அதற்கான காரணம் புலிகள் பயங்கரவாதிகள் என்றும் அவர்கள் தங்களை கொல்ல சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருக்கின்றனர் என்பதுவுமாகும்.

தற்போது யுத்தம் முடிவடைந்து பயங்கரவாதம் துடைத்தெறியப்பட்டுள்ள நிலையில், யாரை பயங்கரவாதிகள் என்று விரலை நீட்டினார்களோ அவர்களை விடுவிக்கும் பொருட்டு பயங்கரவாத சட்டத்தை நீக்க கோருகின்றனர் வரதராஜபெருமாள் மற்றும் சந்திரகுமார் ஆகிய இருவரும்.

இன்று காலை பத்து மணிக்கு கிளிநொச்சி டிப்போச் சந்திக்கருகில் முன்னர் பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டவர்களை விடுதலை செய் என வலியுறுத்திய போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கு

அரசியல் கைதிகளை விடுதலை செய்

சட்டப் பூட்டினை உடை, அரசியல் தீர்மானம் எடு

அரசியல் கைதிகளை விடுதலை செய்

நல்லிணக்கத்துக்கான முதலாவதுபடி அரசியல் கைதிகளின் விடுதலையே,

மண்டேலாவின் விடுதலையே ஆபிரிக்காவில் நல்லிணக்கம் , தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலையே இலங்கயில் நல்லிணக்கம்

எதற்காக இன்னும் அரசியல் கைதிகளுக்குத் தண்டனை?

ஏன் இன்னும் அரசியல் கைதிகள்?

விடுதலை செய் அரசியல் கைதிகளை, வெற்றி கொள் தமிழர் மனங்களை

போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்ததோடு கோசங்களும் எழுப்பியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.

மு. சந்திரகுமார் அரசியல் கைதிகளை தொடர்ந்தும் சிறையில் வைத்துக்கொண்டு நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்டுத்த முடியாது என்று தெரிவித்தபோது, சொல்! சொல்! டக்ளஸிடம் சொல் டக்ளஸை கொல்லவந்ததாக சிறையிலடைத்தவர்களை விடுதலை செய்ய சொல்! என்று மக்கள் முணுமுணுத்ததை கேட்க்கக்கூடியதாக இருந்தது.

குறிந்த நிகழ்வில் கலந்துகொண்ட வரதராஜபெருமாள், போரை நடத்திய மகிந்த ராஜபக்ஸவால் 12 ஆயிரம் போராளிகளை புனர்வாழ்வளித்து விடுதலை செய்ய முடியும் என்றால் ஏன் இந்த அரசினால் முடியாது? தமிழ் மக்களின் அதிக ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த இந்த அரசு தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் இவ்வாறு நடந்துகொள்வது மிகவும் அநீதியான செயற்பாடாகும் எனக் குறிப்பிட்டார்.

போராட்டத்தில் கலந்துகொண்டு அரசியல் கைதிகளின் இரண்டு தாய்மார் தங்களின் பிள்ளைகளை அரசாங்கம் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்றும், அவர்கள் சிறைகளில் நாளாந்தம் மிக மோசமான மன ரீதியான பாதிப்புக்களை சந்தித்து வருகின்றனர் எனவே அவர்களது குடும்பங்களின் பாதுகாப்பு, அவர்களின் நலனக்கள் கருதி விடுவிக்குமாறு மிகவும் உருக்கமாக வேண்டிக்கொண்டனர்



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com