Friday, October 12, 2018

அரசியல் கைதிகள் விடயத்தில் விக்கிக்கு குளுக்கோஸ் வேண்டுமாம்.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கடிதங்களை எழுதியும், நேரில் கூறியும் களைத்துப் போயிருக்கிறேன் களைத்துப்போயிருக்கின்றாராம் என்று தெரிவித்துள்ளார் வடக்கின் முதலைமைச்சர் விக்னேஸ்வரன்.

தமிழ் அரசியல் கைதிகளின் தொடர்ச்சியான உணவு தவிர்ப்பு போராட்டம் குறித்தும், அவர்களுடைய விடுதலை குறித்தும், அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பு மற்றும் பொது அமைப்புக்கள் நேற்று (11) விக்கினேஸ்வரனை சந்தித்து, நீர் இதுவரை குறித்த விடயம் தொடர்பாக மேற்கொண்டுள்ள நடவடிக்கை யாது என வினவியபோது, மேற்கண்டவாறு தெரிவித்த அவர், ஜனாதிபதி ஆக்கபூர்வமாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இவ்விடத்தில் சுட்டிக்காட்டப்படவேண்டிய விடயம் யாதெனில், முன்னாள் நீதியரசரான விக்னேஸ்வரனை மக்கள் முதலமைச்சராக தெரிவு செய்தது இவ்வாறான விடயங்களை அவர் சட்ட ரீதியாக அணுகுவார் என்ற எதிர்பார்பிலேயே. ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுவதாக இருந்தால் மடல் மன்னன் ஆனந்தசங்கரி அவர்களை மக்கள் முதலமைச்சராக தெரிவு செய்திருப்பர்.

மேலும் நீதி அமைச்சர் தலதா அத்துகோரல அரசியல் கைதிகள் இந்த நாட்டில் இல்லை என கூறியிருப்பதை சுட்டிக்காட்டிய விக்கினேஸ்வரன், நீதி அமைச்சரின் கருத்து மிக தவறானது என்றும் சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் அரசியல் காரணங்களுக்காக பயங்கரவாத தடைச்சட்டம் என்ற பிரத்தியேக சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் ஆக்கப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அந்த சட்டத்தின் கீழ் அவர்களை குற்றவாளிகள் ஆக்க முடியாது என்றும் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களை வைத்து கைதுகள், வழக்குகள் நடாத்தப்பட்டிருக்கின்றன என்றும் தெரிவித்துள்ள விக்கினேஸ்வரன் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை மட்டும் வைத்து குற்றவாளிகள் ஆக்க இயலாது என்று தெரிவித்துள்ளர். அவ்வாறாயின் இங்கு நாம் எழுப்பும் கேள்வி யாதெனில் விக்கினேஸ்வரன் தான் உச்ச நீதிமன்றில் இருந்தபோது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட எத்தனை வழக்குகளை தள்ளுபடி செய்தார்.

எது எவ்வாறாயினும் விக்கினேஸ்வரன் வேட்பாளராக மக்களிடம் வாக்கு கேட்டபோது, தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலிகள் விவகாரம் தொடர்பாக ஒர் வாக்குறுதி வழங்கயிருந்தார். அந்த வாக்குறுதி யாதெனில், இன்று நீதிபதிகளாக இருக்கின்ற பலர் தனது யூனியர்களாக கடமையாற்றியவர்கள் என்றும் அவர்களிடம் பேசி குறித்த நபர்களுக்கு விடுதலை பெற்றுக்கொடுப்பேன் என்பதுவும் ஆகும்.

வாக்குக்காக நீதித்துறையையே நிந்தித்த விக்கினேஸ்வரனின் மேற்படி வாக்குறுதிளை கேள்விக்குட்படுத்தாக மக்கள் விக்னேஸ்வரனை கண்மூடித்தனமாக தேர்ந்தெடுத்தனர். முடிவில் அவர் வழங்கிய எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத நிலையில் அடுத்த தேர்தலுக்கு மீண்டும் தயாராகி வருகின்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com