Saturday, October 27, 2018

மைத்திரி-மஹிந்த தலைமையில் கூடியது ஐ.ம.சு.மு. திங்கள் கிழமை புதிய அமைச்சரவை.

ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்ற சூழ்நிலையில் சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் மைத்திரி மற்றும் மஹிந்தவின் தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் முதன்முறையாக கூடியுள்ளனர். இவ்ஒன்று கூடலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

முடிவில் நாளை மறுதினம் புதிய அமைச்சரவை சத்தியப்பிரமானம் செய்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிவித்தலை சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாபா அபயரத்ன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

குறித்த ஒன்றுகூடலின்போது சகல ஊடகங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com