Sunday, October 28, 2018

மஹிந்தரின் வரவை கிளிநொச்சி மக்களும் பட்டாசு கொழுத்தி கொண்டாடினர்.

நாட்டின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டதை ஆதரித்து நாடுபூராகவும் மக்கள் தமது மகிழ்சியை தெரிவித்திருந்தனர். குறிப்பாக கடந்த தேர்தலின்போது, மஹிந்தவை முற்றாக எதிர்த்த வடகிழக்கு மக்கள் அவரது மீள்வருகையை கொண்டாடியது குறிப்பிடத்தக்கதாகும்.

அந்தவகையில், யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டதும், மஹிந்த ராஜபக்சவை பெரிதும் வெறுக்கின்ற மக்கள் வாழ்வதாக நம்பப்படும் கிளிநொச்சி மாவட்ட மக்கள் அவரது மீள்வருகையை வரவேற்றுள்ளனர்.

கிளிநொச்சியில் பொதுஜன பெரமுனவின் ஏற்பாட்டில் இன்று பிற்பகல் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பொதுஜன பெரமுன கட்சி அலுவலக முன்னறலில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கிளிநொச்சி மக்கள் மஹிந்த ராஜபக்சவின் புதிய நியமனத்தினை பட்டாசு கொழுத்தி கொண்டாடினர்.

கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் க.ஜெயகுமாரன் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொங்கலும் பரிமாறப்பட்டது.








அவ்வாறே யாழ் மாவட்ட மக்கள் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்க அவர்களின் மீள்வருகையை கொண்டாடியதை கீழுள்ள காணொயில் காணலமாம்.







0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com