Monday, October 22, 2018

வெல்கம மூளை குழம்பி ஜனாதிபதியாகும் கனவில் இருக்கிறாராம்! கூறுகின்றார் காமினி லொகுகே .

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக கோத்தபாயவின் இறக்கத்திற்கு எதிராக பலமாக குரல் எழுப்பி வருகின்றார் குமார வெல்கம. இந்நாட்டில் ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளிக்கக்கூடிய ஒருவரையே பொது எதிரணி களமிறக்கவேண்டும் என்பது அவரது கோரிக்கை.

இந்நிலையில், குமார வெல்கமவின் மூளை குழம்பியுள்ளதால் அவருக்கு தாம் பதிலளிக்க தயாராக இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.

முன்னால் பாதுகாப்பு செயலாளர் சனநாயக விரோதியாவார் என்ற குமார வெல்கம வின் குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் பொருட்டு, நாட்டில் அனைத்து மக்களுடைய சனநாயக்தை காப்பாற்றிக்கொடுத்தது கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான பாதுகாப்பு படையே என காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

மேடைகளுக்கு ஏறியதும் அதிகளவானோர் தேவைக்கு அப்பால் கைகொட்டும்போது, இந்நாட்டில் ஜனாதிபதியாகும் ஆசை தனக்கும் ஏற்பட கூடுமெனவும் அவர் கிண்டலடித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com