Monday, October 22, 2018

போதாவின் பிரேத பரிசோதனை அறிக்கை கால தாமதமாவதேன்? விசாரணை பிற்போடப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை அறிக்கை மன்றில் சமர்ப்பிக்க காலதாமதம் ஆகியதால் விரிவுரையாளரின் உயிரிழப்பு தொடர்பான வழக்கு பிற்போடப்பட்டுள்ளது.

காணாமற் போயிருந்த நிலையில் கடலிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளர் போதநாயகியின் உயிரிழப்பு தொடர்பான வழக்கு இன்று (22) திருகோணமலை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுக்கப்பட்டிருந்தது.

இறப்பு தொடர்பான சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை மன்றில் சமர்பிக்கப்படாமையால், நீதிவான் எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ம் திகதிக்கு வழக்கினை மீண்டும் விசாரணைக்கு எடுப்பதாக அறிவித்தார்.

மன்றில் வழக்கு எடுக்கப்பட்டபோது போதாநாயகியின் மரணம் தொடர்பில் கொலையாளி என குற்றஞ்சுமத்தப்படுகின்ற அவரது கணவன் செந்தூரன் அவரது சகோதரர் குற்றம் சுமத்தும் விரிவுரையாளரரின் தாய் சகோதரர்களும் ஆஜராகியிருந்தனர்.

மரண விசாரணை யாழ் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி மயூரனால் மேற்கொண்டிருந்தபோதும், அந்த அறிக்கை இதுவரை மன்றிற்கு சமர்பிக்கப்படாமல் இருப்பதற்கான காரணங்கள் சந்தேகத்தை கிளப்புகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com