Friday, October 19, 2018

மாணவன் மயங்கிவிழும் வரை பந்தாடிய ஆசிரியர்.

12ம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனை மயங்கிவிழும் வரை வகுப்பறையில் ஆசிரியர் ஒருவர் அடித்த சம்பவம் ஒன்று குளியாப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

வகுப்பறையினுள் நுழைந்த குறித்த ஆசிரியர், மாணவனை ஆசியரியை ஒருவர் மற்றும் சக மாணவர்கள் முன்னிலையிலேயே இவ்வாறு தாக்கியுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான மாணவன் பின்னர் தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு தனியார் வைத்தியசாலையில் அனுமதித்தமைக்கான உள்நோக்கம் சம்பவத்தை மூடி மறைப்பது என சந்தேகம் வெளியிடும் குடும்பத்தினர், அவரை குளியாப்பிட்டி அரசினர் போதனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

ஆசிரியரின் பிரத்தியேக வகுப்புக்களுக்கு செல்லாமையே தான் இவ்வாறு தாக்குதலுக்குள்ளானதற்கான காரணம் என பாதிக்கப்பட்டுள்ள மாணவன் தெரிவித்துள்ளான்.

கல்வித் திணைக்களத்தினரும் பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com