Tuesday, October 2, 2018

மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலர் யோகராஜன் அடித்து விரட்டப்பட்டார்.

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றி வந்தவர் யோகராஜன். பொது நிர்வாக சேவை உத்தியோகித்தர் என்பதை விட மக்கள் விரோத உத்தியோகித்தராகவே அடையாளம் காணப்பட்டிருந்தார் என மண்முனை பிரதேச செயலகத்திற்கு சேவைநாடிச் சென்ற பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் பிரதேச செயலகத்திலுள்ள ஊழியர்களுடனும் யோகராஜன் அதிகார வெறியுடன் செயற்பட்டு வந்துள்ளார். யோகராஜனின் மேற்படி செயற்பாடுகளுக்கு மண்முனை வடக்கில் பிரதேச செயலாளராக கடமையாற்றிய குணநாதன் என்பவர் உறுதுணையா இருந்ததாக பிரதேச செயலக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

குணநாதன் இடமாற்றம் பெற்றுச்சென்று, புதிய பிரதேச செயலாளராக கடமையேற்றுள்ள தயாபரன் அவர்களுடன் ஒத்துழையாமையால் இருவரிடையே முரண்பாடு வலுப்பெற்ற நிலையில், யோகராஜன் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளதாகவும் யோகராஜனுக்கு வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ வாகனம் பறிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

தற்காலிகமாக கிரான் பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக தஞ்சம் புகுந்துள்ள யோகராஜனது நிரந்தர இடமாற்றம் மற்றும் உத்தியோகபூர்வ வாகனம் தொடர்பில் சுற்றுலாச் சென்றுள்ள மாவட்ட செயலாளர் நாடுதிரும்பியவுடன் முடிவெடுக்கப்படும் என மாவட்ட செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

யோகராஜன் மண்முனை பிரதேச செயலகத்தில் காணப்படும் அரச காணிகள் தனது தாயதிச்சொத்து என்ற ரீதியில் செயற்பட்டுவந்ததாகவும், அரச காணிகளை பெற்றுக்கொள்ள தகுதியுடையவர்கட்டு அவற்றை வழங்குவதில் பெரும்முட்டுக்கட்டையாக இருந்து வந்துள்ளதாகவும் குறைபாடுகள் கூறப்படுகின்றன. காணிப்பங்கீட்டு விடயத்தில் குணநாதன் மற்றும் யோகராஜன் இணைந்து மேற்கொண்ட மக்கள் விரோத அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் இலங்கைநெட் ஆதாரங்களுடன் மிகவிரைவில் அம்பலப்படுத்தும் என்பதை வாசகர்கட்கு அறியத்தருகின்றோம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com